Archive for the Swiss News Category

“வேட்டைக்காறன்” தமிழன் பார்த்து ரசிப்பானா?

vijay“வேட்டைக்காறன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை.

விஜயின் வேட்டைக்காறன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:

தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காறன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!

வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

மேலும்…. »

Cinema, Swiss News

10 Comments

தமிழின அழிப்பின் இறுதிக் கட்டம் யாரைக் காப்பாற்றுவதற்க்கு சூரிச்சில் போலித் தமிழ்க் கூட்டம்

swiss_conferenceதமிழ் மக்களையும் தமிழீழ மண்ணையும் ஆரிய பௌத்த சிங்களம் தனது இறுக்கமான இராணுவப் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது. மே 18ந் திகதி தமிழீழ மக்களின் ஒரே ஒரு விசுவாசமான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப் பட்டு விட்டது. அது முதல் தமிழீழத்திலும் வெளியிலும் உள்ள தமிழரின் இயங்குதிறன் முற்றாக முடக்கப்பட்டும் விட்டது.

இந்த உண்மையை உணராதவர்கள் ஏற்காதவர்கள் ஏற்க விரும்பாதவர்கள், எவரும் ஏற்றுவிடக் கூடாது என நினைப்பவர்கள் எனப் பல வகையாகத் தமிழினம் சிதறுண்டு கிடக்கிறது. ஈழத் தமிழரின் உரிமைப் போரை முதலில் கணக்கில் எடுக்காத சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் அரசியல் தலைவர்களுக்குப்

மேலும்…. »

Articles, Swiss News

No Comments

சுவிஸ் தமிழ் இளையோரின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

TYO_SWISSவதை முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக் கோரி சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் சூரிச் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது

வருகின்ற 24.10.2009 அன்று நடைபெறவிருக்கும் உண்மைக்காய் எழுவோம் நிகழ்வையொட்டி சுக்பேர்ண் மாநிலங்களைத் தொடர்ந்து இன்று சூரிச் மாநிலத்திலும் கவனயீர்ப்பு நாடத்தப்பட்டது.

இதுவரை காலமும் தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீராக்ளுக்கும் மக்களுக்கும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு 17:00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினரால் தற்போதைய நிலைமையை விளக்கி

மேலும்…. »

Swiss News

No Comments

களியாட்ட மங்கையுடன் கருணா சுவிஸ்சில் அட்டகாசம்

karuna-Girl-Swissஇலங்கையின் அமைச்சரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பியோடியவருமான அமைச்சர் கருணா, சமீபத்தில் இரகசியமாக சுவிஸ்சர்லாந்துக்குச் சென்று வந்துள்ளார். அங்கு இரவுநேரக் கேளிக்கை விடுதிஒன்றில் களியாட்ட மங்கைகளுடன் உல்லாசமாக இருந்த அவர், மதுபோதை தலைக்கேற அங்கு நின்ற அழகி ஒருவருடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

விடுவார்களா எமது மக்கள் இதனை அம்பலப்படுத்தாமல் ? உடனே இந்தப் புகைப்படங்களை அதிர்வுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் ஆடக்கூடிய கூத்தா இது ? இவ்வாறான அழகிகளுடன் தொடர்புகளை வெளிநாட்டில் உள்ள அமைச்சர்கள் வைத்திருந்தால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிடுவார்கள். அல்லது ஆட்சியே கவிழ்ந்துபோகும் நிலை வெளிநாடுகளில் உள்ளது.

மேலும்…. »

Swiss News

1 Comment

சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுகூரல்

bsசுவிட்சர்லாந்தில் கறுப்பு யூலை நினைவை முன்னிட்டு நினைவு கூரல்நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மாலை 17.00மணிக்கு சுவிஸ் பாராளுமன்றச் சதுக்கத்தில் ஆரம்பமான இவ் நினைவுகூரலில் 83 யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக வணக்கம் செலுத்தப்பட்டது.

சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பலர் நினைவுரையாற்றியிருந்தனர் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 83 யூலை இன அழிப்பில் படுகொலைகளை நினைவு கூர்ந்தும் சுவிஸ் பாராளுமன்றச் சதுக்கத்தில் 23.07.2009 வியாழக்கிழமை ஒன்றுகூடல் நடைபெற்றது.

மேலும்…. »

News, Swiss News

No Comments

பாதயாத்திரை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நிறைவு.

swissதாயக மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்குடன் சுவிஸ் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 250 கி.மீ. நீள பாதயாத்திரை புதன் மாலை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நிறைவு பெற்றது.

இதன்போது, மாலை 5:00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான ஒன்றுகூடலில் பசுமைக் கட்சியின் வோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வன்சிங்கர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி சிவாஜினி தேவராஜா தலைமையில் நடபெற்ற நிகழ்வில், இனவெறிக்கு எதிரான எஸ்.ஓ.எஸ். அமைப்பின் பணிப்பாளர் கார்ல் குறுண்பேர்க், சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் திருமதி அன்னா அனோர், செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், உபதலைவர் சண் தவராஜா ஆகியோரும் உரையாற்றனர்.

மேலும்…. »

Swiss News, Tamileelam News

No Comments

சுவிஸ் உள்நாட்டு அமைச்சர் ராஜினாமா அறிவிப்பு

சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சர் திரு பாஸ்கால் குஷ்பின் எதிர்வரும் அக்ரோபர் 31 ம் திகதியுடம் பதவி விலகும் அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை 12.06.2009 அறிவித்துள்ளார்.

கடந்த பதினொரு ஆண்டுகளாக சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு அமைச்சராக பணிபுரிந்த பாஸ்கால் குஷ்பின் FDP கட்சியை சேர்ந்தவராவார். 2008 ம் ஆண்டின் சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாகவும் இவர் பணியாற்றியிருந்தார்.

மேலும்…. »

Swiss News

No Comments

சுவிசில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் “தமிழினம் அடிமையா? அகதியா? அழிந்துவிடுமா? உன்னுடைய கடைமை என்ன ?”


அன்பான சுக் வாழ் தமிழ் உறகளே!!!

தாயகத்தில் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பற்றக் கோரி சுக் நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 5 கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுக் கையளிப்பும் நடைபெறவுள்ளது.

துயர்களையும் சோர்வுகளையும் மறந்து எம்மின விடுதலைக்காக எம் தேசியத் தலைமையின் கீழ் தொடரப்படவிருக்கும் அரசியல்நகர்வுக்கு சுக் மானிலத்தில் அனைவரும் திரண்டு அத்திவாரமிடுவோம் என அனைவரையும் அழைக்கிறார்கள் சுக் தமிழ் இளையோர் அமைப்பினர்.

மேலும், அவர்கள் அனைத்து மக்களும் முடிந்தவரையில் கறுப்புடையில் சழூகமளிக்கவும் எனக் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலும்…. »

Swiss News, Tamileelam News

No Comments

கருத்துக்கணிப்பு

மக்களே எமது மொத்த தமிழினமே எதிரியின் திட்டமிட்ட இனவழிப்பு ஆக்கிரமிப்பு போரிற்கு முகங்கொடுத்து நிற்கும் இந்த அவசரகால நிலையில்…

எம் தாயக விடுதலைக்கான பயனத்தில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இக்காலகட்டத்தில்…

எமது இந்த அவசர நிலையினை உலகெங்கும் எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணியினை ஆற்ற வேண்டிய ஊடகங்களானது அவற்றின் பணியினை செவ்வனே செய்கின்றனவா….

மேலும்…. »

Swiss News, Tamileelam News

No Comments

தமிழர் இணையமைப்பான So4Ta வின் 20 000மனு கையளிப்பு, தெற்காசியப் பொறுப்பாளருடனான சந்திப்பும் (படங்கள் இணைப்பு)


சுவிஸ் பேர்ன்: சுவிஸ் நாட்டு பிரமுகர்கள் மற்றும் தமிழர் இணை அமைப்பான Swiss Solidarity for Tamil (So4Ta) 13.04.09 அன்று இலங்கையில் போரைநிறுத்தி அங்கிருக்கும் மக்களைக் காப்பற்றக் கோரி ஆரம்பித்து வைத்த மனுவிற்கான கையொப்பமிடும் வேலைத்திட்டத்தை 15.05.09 அன்று நிறைவு செய்தனர்.

குறுகிய காலத்தில் சுவிஸ் தமிழ் இளைஞர்களால் 20 000 கையொப்பங்கள் பெறப்படட்து. அதிகளவு சுவிஸ் மக்களால் கையொப்பமிடப்பட்ட இம்மனு காலத்திற்கு ஏற்றவாறு புதிய கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று 08.06.09 திங்கள் 12:15 மணியளவில் சுவிஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான Herr Henrry Sickert என்பவரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும்…. »

Swiss News

No Comments